ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக பாஜக மாற்றிவிட்டது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
சட்டீஸ்கரில் ஆளும் ரமன் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தை மாவோயிஸ்டுகள் இல்லாத மாநிலமாக மாற்றிவிட்டது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் இன்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய அமித் ஷா, நலத்திட்ட உதவிகளில் சட்டீஸ்கர் மாநிலம் மிகச் சிறந்து விளங்குகிறது என்றும் ரமன் சிங் தலைமையிலான அரசு கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றிருப்பதாகவும் கூறினார்.