கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது இதுகுறித்து விளக்கமளித்தவர் கூறியதாவது,
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் மத்திய பொதுவிநியோக வழங்கல் திட்டத்தின் கீழ் 89,540 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் அப்போதே ரூ.5,616.77 கோடியும், கூடுதல் உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் கோடியும் நிதி கோரி கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில், பாதிப்புகளில் இருந்து மறுசீரமைப்புக்காக ரூ.31 ஆயிரம் கோடி குறைந்தபட்ச நிதி தேவைப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொதிக்கும் வெய்யில்.. நல்ல விஷயம் சொன்ன சென்னை வானிலை!
கென்னை நேரில் அழைத்துப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

நீட் தோ்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பதற்றம் வேண்டாம்: என்டிஏ

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


