கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது இதுகுறித்து விளக்கமளித்தவர் கூறியதாவது,
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் மத்திய பொதுவிநியோக வழங்கல் திட்டத்தின் கீழ் 89,540 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் அப்போதே ரூ.5,616.77 கோடியும், கூடுதல் உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் கோடியும் நிதி கோரி கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில், பாதிப்புகளில் இருந்து மறுசீரமைப்புக்காக ரூ.31 ஆயிரம் கோடி குறைந்தபட்ச நிதி தேவைப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காஜல் அகர்வாலின் 'தி இந்தியா ஸ்டோரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


