6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு கவலைதரும் செய்தி: ஏடிஎம்-மில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு குறைப்பு

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஒரு நாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு ரூ.20 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 12:00 pm

DIN


எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்வதைத் தவிர்க்கும் வகையில், ஒரு நாளில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்ச வரம்பு ரூ.20 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு நாளில் எஸ்பிஐ-யின் டெபிட் கார்டைக் கொண்டு அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் எடுக்க முடியும். இந்த நடைமுறை அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நவம்பர் 1ம் தேதி முதல் ஏடிஎம்மில் உச்சபட்சமாக ரூ.20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

வரவிருக்கும் விழாக்காலங்களை மகிழ்ச்சியாகக் கொண்டாடத் தயாராகி வரும் எஸ்பிஐ  வாடிக்கையாளர்களுக்கு இது சற்று கவலை தரும் செய்தியாகவே அமையும்.

எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டில்  மோசடி நடப்பதாகக் கடந்த சில மாதங்களாக ஏராளமான புகார்கள் வருவதையடுத்து, இந்த நடவடிக்கையை எஸ்பிஐ வங்கி மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வங்கிகளுக்கு வந்திருக்கும் அறிவுறுத்தலில், டெபிட் கார்டு மோசடி குறித்து ஏராளமான புகார்கள் வரும் நிலையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், வங்கிகளில் ஒரு நாளைக்கு பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 2018ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பிவைக்குமாறு வங்கிகளை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கி வாயில்களிலும் இது தொடர்பான அறிவிப்புப் பலகையை வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த மாற்றம் எஸ்பிஐ வங்கியால்  அளிக்கப்பட்ட கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஒரு வேளை இந்த அட்டை வைத்திருப்பவர்கள் தினமும் அதிகபட்ச தொகையை ஏடிஎம்மில் எடுக்க வேண்டும் என்றால் வங்கியைத் தொடர்பு கொண்டு அதிக உச்ச வரம்பு கொண்ட அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.