எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இந்தியா - ரஷியா கூட்டு எச்சரிக்கை
எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு, இந்தியா மற்றும் ரஷியா கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.


புது தில்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு, இந்தியா மற்றும் ரஷியா கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
பாகிஸ்தான் தொடர்ந்து தனது மண்ணில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகிறது. அத்துடன் எல்லைப் பகுதி ஊடுருவல்கள் மற்றும் காவல்துறையினர் மீதான தாக்குதல்களையும் ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு : பாகிஸ்தானுக்கு, இந்தியா மற்றும் ரஷியா கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.
பிரதமர் மோடி மற்றும் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமீர் ரஷிய இடையிலான மாநாட்டை அடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தானுக்கு மறைமுகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு இரு நாடுகளும் கண்டனம் தெரிவிப்பதாகவும், பயங்கரவாத விவகாரத்தில் இரட்டை நிலைபாட்டை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கப்படும் சர்வதேச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலான நடவடிக்கைக்கு எதிராக தீர்க்கமான பதிலடி தேவையெனவும் இருதரப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...