பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து விபத்து: 9 பேர் பலி  

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில்,  9 பேர் பலியாளர்கள்.
பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து விபத்து: 9 பேர் பலி  

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில்,  9 பேர் பலியாளர்கள். 

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில்  பிலாய் எஃகு  ஆலை அமைந்துள்ளது. இந்திய ரெயில்வேக்கு தண்டவாளங்கள், கனரக எஃகு தகடுகள் மற்றும் கட்டமைப்பு எஃகு உள்பட  ரெயில்வெக்குத் தேவையான கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் ஒரே   நிறுவனம் என்னும் சிறப்பு வாய்ந்ததாகும். 

கடந்த ஜூன் மாதம் நவீனமயமாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் பிலாய் எஃகு ஆலையில் செவ்வாய் காலை எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில்,  9 பேர் பலியாளர்கள்.  

செவ்வாய் காலை  11 மணி அளவில் ஆலையின் முக்கிய கேஸ் பைப் லைன் வெடித்து  சிதறியது.  இதில் 9 பேர் பலியானார்கள்.  மேலும் 24 தொழிலாளர்கள் காயமடைந்துளளனர். 

படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com