நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து விபத்து: 9 பேர் பலி  

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில்,  9 பேர் பலியாளர்கள்.

News image
Updated On :9 அக்டோபர் 2018, 1:43 pm

DIN

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில்,  9 பேர் பலியாளர்கள். 

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில்  பிலாய் எஃகு  ஆலை அமைந்துள்ளது. இந்திய ரெயில்வேக்கு தண்டவாளங்கள், கனரக எஃகு தகடுகள் மற்றும் கட்டமைப்பு எஃகு உள்பட  ரெயில்வெக்குத் தேவையான கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் ஒரே   நிறுவனம் என்னும் சிறப்பு வாய்ந்ததாகும். 

கடந்த ஜூன் மாதம் நவீனமயமாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் பிலாய் எஃகு ஆலையில் செவ்வாய் காலை எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில்,  9 பேர் பலியாளர்கள்.  

செவ்வாய் காலை  11 மணி அளவில் ஆலையின் முக்கிய கேஸ் பைப் லைன் வெடித்து  சிதறியது.  இதில் 9 பேர் பலியானார்கள்.  மேலும் 24 தொழிலாளர்கள் காயமடைந்துளளனர். 

படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.