ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் எஃகு ஆலையில் எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் பலியாளர்கள்.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் பிலாய் எஃகு ஆலை அமைந்துள்ளது. இந்திய ரெயில்வேக்கு தண்டவாளங்கள், கனரக எஃகு தகடுகள் மற்றும் கட்டமைப்பு எஃகு உள்பட ரெயில்வெக்குத் தேவையான கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கடந்த ஜூன் மாதம் நவீனமயமாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில் பிலாய் எஃகு ஆலையில் செவ்வாய் காலை எரிவாயுக் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் பலியாளர்கள்.
செவ்வாய் காலை 11 மணி அளவில் ஆலையின் முக்கிய கேஸ் பைப் லைன் வெடித்து சிதறியது. இதில் 9 பேர் பலியானார்கள். மேலும் 24 தொழிலாளர்கள் காயமடைந்துளளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



