கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரில் 3000 மீட்டர் தடை தாண்டும் தடகளத்தில் இந்திய வீராங்கனை பாரூல் சௌதரி (31 வயது) இறுதிப் போட்டியில் பதக்கத்தை இழந்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள்.
மகளிர் 3000 மீட்டர் தடை தாண்டுதலில் இந்தியாவின் பாரூல் சௌதரி இறுதிப் போட்டியில் 9:26.75 நிமிஷங்களில் கடந்து அசத்தினார். ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்த பாரூல் பதக்க வாய்ப்பை இழந்தார்.
முதலிடத்தில் கென்யாவின் ஃபெய்த் செரோடிச் 9:01.76 நிமிஷங்களில் முடித்து தங்கம் வென்றார். வெள்ளி மற்றும் வெண்கலம் முறையே இங்கிலாந்து, உகாண்டா வீராங்கனைகள் பெற்றார்கள்.
முன்னதாக, பாரூல் செளதரி பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் தடை தாண்டும் ஓட்டத்தில் முதல் சுற்றில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தார். இந்த நிலையில், காமன்வெல்த் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றுள்ளார்.
இதுவரை இந்திய அணி 15 பதக்கங்களை (3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ளது. குத்துச்சண்டையில் 10 பதக்கங்கள் கிடைக்குமென மிகுந்த எதிர்பார்ப்பில் இந்திய அணி இருக்கிறது.
Congratulations to Faith Cherotich on winning the gold medal.
— DP ð°ðª (@DanChepta) July 30, 2026
In the womenâs 3000m steeplechase
At the Commonwealth Games in Glasgow. pic.twitter.com/QRxzTRForf
Result Updateð¨: Athletics, Women's 3000m Steeplechase Final
— SAI Media (@Media_SAI) July 29, 2026
TOPS Development athlete Parul Chaudhary finished 5th in the Women's 3000m Steeplechase Final, clocking a time of 9:26.75.
#CWG2026 #Cheer4Bharat #Glasgow2026 pic.twitter.com/MJMQqHpGXH
Summary
CWG 2026: Indian Athletics, Parul Chaudhary finished 5th in the Women's 3000m Steeplechase Final, clocking a time of 9:26.75.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 8, 9ஆவது பதக்கங்களை உறுதி செய்த அன்குஷ், நரேந்தர்!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 6ஆவது பதக்கத்தை உறுதிசெய்த அருந்ததி!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்ஷி!

காமன்வெல்த்: பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த சஞ்சனா!
விடியோக்கள்

அனுபவம் இல்லையா? அக்கறையில்லையா?: முதல்வரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார் | ADMK | TVK




