கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி (23 வயது) அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு, குத்துச்சண்டைப் பிரிவில் ஆறாவது பதக்கத்தையும் உறுதிசெய்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை அருந்ததி சௌதரி மகளிர் 70 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை மார்கன் ஹென்டர்சன் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில், சாக்ஷி சௌதரிக்கு மூன்று நடுவர்கள் சாதகமாகவும் ஒரு நடுவர் மார்கன் ஹென்டர்சனுக்கு ஆதரவாகவும் ஒரு நடுவர் சமமான புள்ளிகளையும் வழங்கினார்கள். இதன் மூலம், மெஜாரிட்டி ஸ்பிலிட் முறையில் 3-1 என சாக்ஷி சௌதரி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ எடைப் பிரிவு), ப்ரியா கங்காஸ் (60 கிலோ எடைப் பிரிவு), ப்ரீத்தி பவார் (54 கிலோ எடைப் பிரிவு), ஜடுமானி சிங் (55 கிலோ எடைப் பிரிவு), சாக்ஷி சௌதரி (51 கிலோ எடைப் பிரிவு) ஆகியோர் பதக்கம் வெல்லும் நிலையில், இதில் ஆறாவது வீராங்கனையாக அருந்ததி சௌதரி இணைந்துள்ளார்.
இந்த அரையிறுதிப் போட்டி ஜூலை 31ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை இந்தியா 12 பதக்கங்களை (2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ள நிலையில், குத்துச்சண்டையில் மட்டுமே 6 பதக்கங்கள் உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
TOPS Core athlete Arundhati Choudhary booked her place in the Women's 70kg Semi-finals at the Commonwealth Games 2026 after defeating Morgan Henderson of New Zealand by a 3â1 split decision in the quarter-finals.
— SAI Media (@Media_SAI) July 29, 2026
With this victory, Arundhati has secured at least a Medal for⦠pic.twitter.com/9skAJYkm7Q
Summary
Arundhati Choudhary assures sixth boxing medal for india at cwg
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7ஆவது பதக்கத்தை உறுதிசெய்த சச்சின்!

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்ஷி!

காமன்வெல்த்: பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்த சஞ்சனா!

அசைக்கமுடியாத மனோதிடம்... முதல் பதக்கம் வென்றவருக்கு மோடி புகழாரம்!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |




