காமன்வெல்த் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்சனா தனக்குக் கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் 94 கிலோ பளுவைத் தூக்காமல் போட்டியிலிருந்து வெளியேறினார்.
பளுதூக்குதலில் பதக்கம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்நாட்ச் பிரிவிலேயே அவர் வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23 தொடங்கின. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க, இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில், மகளிருக்கான 77 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சஞ்சனா கலந்துகொண்டார்.
19 வயதான சஞ்சனா ஸ்நாட்ச் பிரிவில் 94 கிலோ எடையை தனக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் தூக்க முடியாமல் க்ளீன் & ஜெர்க் பிரிவுக்குச் செல்லாமலேயே வெளியேறினார்.
இந்தப் பிரிவில் இது இரண்டாவது முறையாக டிஎன்எஃப் (டிட் நாட் ஃபினிஷ்) ஆக இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். சஞ்சனாவுக்கு முன்னதாக நிரூபமா தேவி 63 கிலோ எடைப் பிரிவில் 93 கிலோ பளுவைத் தூக்க முடியாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Summary
Sanjana crashes out after failing all three snatch attempts in women's 77kg
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் ஹர்ஜிந்தர் கௌர்!
கனமழையிலும் அசத்திய குல்வீர் சிங்... காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி!

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டி!
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |




