FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!

சென்செக்ஸ் 888.68 புள்ளிகள் உயர்ந்து 77,654.60 புள்ளிகளாகவும், நிஃப்டி 264.85 புள்ளிகள் உயர்ந்து 24,250.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 5:19 pm IST

மும்பை: ஐடி பங்குகள், எச்டிஎஃப்சி வங்கி மற்றும் புதிய வெளிநாட்டு நிதி வரவு உள்ளிட்டவையால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு, இன்றைய வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 999.57 புள்ளிகள் உயர்ந்து, 77,765.49 ஐ எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 888.68 புள்ளிகள் உயர்ந்து 77,654.60 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 264.85 புள்ளிகள் உயர்ந்து 24,250.20 புள்ளிகளாக நிலைபெற்றது.

உலகளாவிய அச்சமானது, வலுவான உள்நாட்டு அடிப்படைகளுடன் மேலோங்கியதால், இன்று பிற்பகுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வின் கொள்கை முடிவு வெளியாகவுள்ள நிலையிலும், இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் 4.70 சதவிகிதமும், இன்ஃபோசிஸ் 4.50 சதவிகிதமும் உயர்ந்தன.

சென்செக்ஸில் ட்ரென்ட், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் என்.டி.பி.சி ஆகிய பங்குகள் சரிந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.8% உயர்ந்த நிலையில் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1.5% அதிகரித்தது. துறைவாரியாக, ரியல்டி தவிர மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.

தகவல் தொழில்நுட்பம், ஊடகம், உலோகம், மருந்து, தொலைத்தொடர்பு, தனியார் வங்கி, எஃப்.எம்.சி.ஜி மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட குறியீடுகள் தலா 1 முதல் 2% வரை உயர்ந்தன.

ஆசிய சந்தையில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.98 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 225 குறியீடும் சரிவுடன் முடிவடைந்தன. அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் உயர்வுடன் நிலைபெற்றது.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 3.79 சதவீதம் உயர்ந்து 87.28 அமெரிக்க டாலராக உள்ளது.

Summary

Benchmark indices Sensex and Nifty rebounded sharply on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.