அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆணையிட்டுள்ளார்.

ரயில்களில் மொத்தம் 336 அதி சொகுசுப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் 62 குளிர்சாதன வசதியுடன் கூடியதாகும். இதில் 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை மற்றும் ஒரு கூடுதல் அறையுடன் அமைந்துள்ளது. ஒவ்வொன்றிலும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 5 நாட்கள் வரை தங்க முடியும்.

இவைகளை ரயில்வேத்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் இதர விவிஐபி அந்தஸ்து பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வழங்குமாறு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆணையிட்டுள்ளார். இதில் தனது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 பெட்டிகள் உட்பட அனைத்தையும் பொதுமக்களுக்கான வணிக சேவைகளுக்கு வழங்கும் அறிவிப்பை ஐஆர்சிடிசி-யிடம் அவர் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டில் பதுக்கிய 1,361 மது புட்டிகள் பறிமுதல்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: தமிழகமே கவனிக்கும் திமுகவின் கோட்டை!

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


