அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க பியூஷ் கோயல் ஆணை

அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆணையிட்டுள்ளார்.
அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க பியூஷ் கோயல் ஆணை
Updated on
1 min read

அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆணையிட்டுள்ளார்.

ரயில்களில் மொத்தம் 336 அதி சொகுசுப் பெட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் 62 குளிர்சாதன வசதியுடன் கூடியதாகும். இதில் 2 படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை மற்றும் ஒரு கூடுதல் அறையுடன் அமைந்துள்ளது. ஒவ்வொன்றிலும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 5 நாட்கள் வரை தங்க முடியும். 

இவைகளை ரயில்வேத்துறை மூத்த அதிகாரிகள் மற்றும் இதர விவிஐபி அந்தஸ்து பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலை உள்ளது.

இந்நிலையில், இந்த அதி சொகுசுப் பெட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வழங்குமாறு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆணையிட்டுள்ளார். இதில் தனது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 பெட்டிகள் உட்பட அனைத்தையும் பொதுமக்களுக்கான வணிக சேவைகளுக்கு வழங்கும் அறிவிப்பை ஐஆர்சிடிசி-யிடம் அவர் வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com