தெற்கு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் இடத்தை ஜம்மு காஷ்மீர் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து சுற்றி வளைத்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் 2 பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். இதையடுத்து, அருகே குடியிருப்பில் இருந்த பொதுமக்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கிருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றினர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணம் கருதி அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிஎஸ்என்எல் உட்பட செல்ஃபோன் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தருமபுரியில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!

தங்கம், வெள்ளி விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தொகுதி மறுவரையறை ஒரு கொடூரமான நடவடிக்கை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


