கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பேரிடர் மீட்புப் படையினருக்கு நேதாஜி பெயரில் தேசிய விருது - பிரதமர் மோடி

பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.  

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:07 pm

DIN

பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.  

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர இந்திய அரசு பிரகடனத்தை அக்டோபர் 21,1943-இல் வெளியிட்டார். இதன் 75-ஆவது ஆண்டு விழாவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார். அப்போது, பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் மேலும் தெரிவித்ததாவது, 

"பேரிடர் காலங்களில் மீட்புப் பணியிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சேவைகளிலும் சிறப்பாக செயல்படும் போலீஸாருக்கு இந்த ஆண்டு முதல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது வழங்கப்படும். இந்த விருதுகள் நேதாஜி பிறந்த தினமான ஜனவரி 23-ஆம் தேதி அறிவிக்கப்படும். 

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரில் இருப்பவர்கள் தைரியமான போலீஸார். அவர்களது  தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை தேசம் மறந்துவிடாது. இவர்கள் யார்? ரயில் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டனரா, தீ விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டனரா அல்லது, கட்டடம் இடிந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனரா, எப்போது மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது யாருக்கும் தெரியாது" என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.