மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

நிதீஷ்குமார் பிறந்த பக்தியார்பூர் நகரத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பிறந்து வளர்ந்த நகரமான பக்தியார்பூர் பெயரை மாற்றம் செய்ய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ்

Updated On :22 அக்டோபர் 2018, 7:41 pm


பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பிறந்து வளர்ந்த நகரமான பக்தியார்பூர் பெயரை மாற்றம் செய்ய மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான கிரிராஜ் திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பு பாட்னாவின் புறநகர்ப்பகுதியான தற்போதைய பக்தியார்பூர் மீது டெல்லியின் சுல்தானாக இருந்த குத்புதீன் ஐபக் படையெடுத்து வந்தார். அந்தப் படைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டின் தளபதியாக பக்தியார் கில்ஜி பொறுப்பேற்றிருந்தார். அந்த பெயரை பின்பற்றியே இந்நகரம் இதுவரை பக்தியார்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நகரத்தின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சர் கிரிராஜ் தெரிவித்தார். 
இக்கோரிக்கையை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் நிராகரித்தார். இதேபோல, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியும் இக்கோரிக்கைக்கு ஆதரவளிக்க முடியாது என தெரிவித்துள்ளன. 
அதேபோல தான் சார்ந்திருக்கும் நவாடா மக்களவை தொகுதியிலுள்ள அக்பர்பூர் நகரத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இந்த பெயருக்கு பதிலாக மாற்றம் செய்ய வேண்டிய பெயரை மத்திய அமைச்சர் குறிப்பிடவில்லை. 
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறுகையில், தங்களை பற்றி ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய தகவல்களை பாஜகவினர் வெளியிடுகின்றனர். பக்தியார்பூர் குறித்து பேசுவதற்கு முன் அதன் வரலாற்றை அவர் முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 
மத்தியில் ஆளும் பாஜக அரசு பலவழிகளிலும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் மக்களின் கவனத்தை ஈர்க்கவும், திசை திருப்பும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளை தினந்தோறும் பாஜக வெளியிட்டு வருகிறது என ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்தி தொடர்பாளரும், எம்எல்ஏவுமான வீரேந்திரா தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.