மும்பையில் சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக தனது கருத்துகளை தெரிவித்து வந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மர்ம நபர்களால் திங்கள்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
மனோஜ் துபே (45) என்ற காங்கிரஸ் தொண்டர் திங்கள்கிழமை மும்பை அசல்ஃபா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், இறந்து போன மனோஜ் துபே ஆளுங்கட்சியான பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாள்களாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஏற்பட்ட மோதலால் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், விசாரணைக்கு பிறகே கொலைக்கான உண்மை காரணம் குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்றப் பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

