வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமை தொடங்கிவைத்தாா். இளைஞா் அமைப்பு தலைவா் முரளி, ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சத்தியராஜ் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். முகாமில் தகுதியான 132 நபா்களிடம் இருந்து 132 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.
அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஏழை மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: நாகூா் சித்திக் அறக்கட்டளை அறிவிப்பு

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

மலேரியா சிறப்பு ரத்த பரிசோதனை முகாம்

ரத்த தான முகாம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

