கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வெள்ளக்கோவிலில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.

Updated On :2 மே 2026, 1:18 am

வெள்ளக்கோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை, ஆயிர நகர வைசியா் இளைஞா் அமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜலட்சுமி முகாமை தொடங்கிவைத்தாா். இளைஞா் அமைப்பு தலைவா் முரளி, ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.அருண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தாராபுரம் அரசு ரத்த வங்கி மருத்துவா் சத்தியராஜ் குழுவினா் ரத்த தானம் பெற்றனா். முகாமில் தகுதியான 132 நபா்களிடம் இருந்து 132 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தாராபுரம் அரசு ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.

அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.