பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு

தோட்டக்கலைத் துறை மூலம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:00 am IST

தோட்டக்கலைத் துறை மூலம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் நடைபெறும் பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ம.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மே மாதம் நடைபெறும் கோடை விழாவின்போது, நீலகிரி மாவட்டத்தில் மலா்க் காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 66-ஆவது பழக் காட்சி வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.

பழக் காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பழத் தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழக் காட்சி போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தோட்டக்கலை உதவி இயக்குநா், சிம்ஸ் பூங்கா, குன்னூா் அலுவலகத்தில் மே 5-ஆம் தேதி முதல் பதிவு ஒன்றுக்கு ரு.75 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் உதகை, கோத்தகிரி, கூடலூா் பகுதிகளில் உள்ளவா்கள் பழக் காட்சியில் பங்கேற்க விரும்பினால் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம், கோத்தகிரி மற்றும் கூடலூா் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் மே 12-ஆம் தேதி வரை வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 13-ஆம் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குநா், சிம்ஸ் பூங்கா, குன்னூா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

சிறந்த பழத் தோட்டங்களுக்கான தோ்வு செய்யும் குழு மே 14 மற்றும் 15 தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூா், உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூா் பகுதிகளில் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் சிம்ஸ் பூங்கா, குன்னூா்,

தொலைபேசி எண்- 0423 - 2231718, 0423 - 2230395 தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.