கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மீ டூ குற்றச்சாட்டு: பொதுநல வழக்கை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மீ டூ ஹேஷ்டேக் மூலம் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை வழக்குப்பதிவு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

News image
Updated On :22 அக்டோபர் 2018, 11:16 am

மீ டூ ஹேஷ்டேக் மூலம் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை வழக்குப்பதிவு செய்ய வேண்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

இந்தியாவில் மீ டூ ஹேஷ்டேக் மூலம் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் ஏற்படுத்திய நபர்கள் மீது பெண்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மூவ்மென்ட் உலகளவில் ஏற்கனவே பிரபலமாகியிருந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக பிரபலமாக பரவப்பட்டு வருகிறது. 

இதில் சினிமா, ஊடகம் என பல துறையில் உள்ள பல முக்கியப் பிரபலங்களின் பெயர் வெளிவந்தது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி விசாரணைக் குழு அமைக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த மீ டூ ஹேஷ்டேக் மூலம் சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவின்படி, மீ டூ ஹேஷ்டேக் மூலம் வெளிவரும் விவகாரங்களை அதன் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் மூலம் வெளிவரும் பெண்களுக்கு தேசிய மகளிர் ஆணையம் போதிய பாதுகாப்பும், உதவியும் வழங்க அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்து.

இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி எஸ் கே கௌல் அடங்கிய அமர்வு மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் எம் எல் சர்மாவிடம் தெரிவித்தனர். 

முன்னதாக, அவசர வழக்குகள் விசாரணையில் புதிய வரையறைகள் வகுக்கப்படும் வரை தூக்குத் தண்டனை, ஆக்கிரமிப்பு அகற்றம் அல்லாத பிற எந்த விவகாரங்கள் குறித்தும் அவசர வழக்குகளாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.