கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிஸா முதல்வருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய கைதி!

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிரட்டல் விடுத்தும், ரூ.50 லட்சம் பணம் கேட்டும் கடிதம் எழுதியது சத்தீஸ்கர் மாநில சிறையில் அடைபட்டுள்ள கைதி ஒருவர்தான் என்பது தெரியவந்துள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 9:09 pm


ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு மிரட்டல் விடுத்தும், ரூ.50 லட்சம் பணம் கேட்டும் கடிதம் எழுதியது சத்தீஸ்கர் மாநில சிறையில் அடைபட்டுள்ள கைதி ஒருவர்தான் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தக் கைதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதேபோன்று பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அவர் ஏற்கெனவே கடிதம் எழுதியிருப்பதாகவும் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒடிஸா முதல்வர் பட்நாயக்குக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அனுப்புநர் விவரங்கள் முறையாக இல்லை. அதைப் படித்த போலீஸார் அதில் சில மிரட்டல் வாக்கியங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், ரூ.50 லட்சம் பிணைத் தொகையை ஒடிஸா முதல்வர் தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தாக அவர்கள் கூறினர்.
கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரித்தபோது அது சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாநில போலீஸாரிடம் ஒடிஸா காவல் துறையினர் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பிலாஸ்பூர் போலீஸார், அக்கடிதத்தை எழுதியது சிறைக் கைதி ஒருவர் என்பதை கண்டறிந்தனர். கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றங்களுக்காக பிலாஸ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் புஷ்பேந்திர நாத் செளஹான். அவர்தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
விளம்பர நோக்கத்துக்காக அவர் இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து கூறிய போலீஸார், கைதி செளஹான் மனப் பிறழ்வு கொண்டவர் என்றும் நிலையான சிந்தனை அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.