சர்வதேச எல்லையையொட்டிய பகுதிகள் நெடுகிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.400 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சர்வதேச எல்லையையொட்டி 17 மாநிலங்களில் உள்ள பகுதிகளில் இருக்கும் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியடையும் நோக்கில், பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2017-18ஆம் நிதியாண்டில் ஏற்கெனவே ரூ.1,100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது கூடுதலாக ரூ.400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
எல்லைப் பகுதி வளர்ச்சித் திட்டத்தின்கீழ் (பிஏடிபி) 17 மாநிலங்களில் உள்ள 111 எல்லை மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களில், சர்வதேச எல்லையையொட்டிய கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், எல்லைப் பகுதி வளர்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், எல்லைப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், குடிநீர் வசதி, தகவல் தொடர்பு வசதி, கழிவுநீர் பாதை வசதி போன்றவை செய்து தரப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ், 2018-19ஆம் நிதியாண்டில், ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், ஹிமாசலப் பிரதேசம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, சிக்கிம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அரசுகளுக்கு ரூ.399.44 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 61 கிராமங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவைகள் மாதிரி கிராமங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
கடந்த 1986-87ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எல்லைப் பகுதி வளர்ச்சித் திட்டத்துக்கு இதுவரை மத்திய அரசால் ரூ.13,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானோடு 3,323 கிலோ மீட்டர் தூர எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. இதேபோல், சீனாவுடன் 3,488 கிலோ மீட்டர் தூரம், நேபாளத்துடன் 1,751 கிலோ மீட்டர் தூரம், பூடானுடன் 699 கிலோ மீட்டர் தூரம், மியான்மருடன் 1,643 கிலோ மீட்டர் தூரம், வங்கதேசத்துடன் 4,096 கிலோ மீட்டர் தூரம் எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

