தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இன்று அதிகாலை கரையைக் கடந்தது தயே புயல்: ஒடிசா, ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை

ஒடிசா மாநிலம் கோபால்புர்  அருகே இன்று அதிகாலை தயே புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2018, 7:22 am

PTI


புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலம் கோபால்புர்  அருகே இன்று அதிகாலை தயே புயல் கரையைக் கடந்தது. இதையடுத்து, ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயல் சின்னமாக மாறியதால் தயே என்று பெயரிடப்பட்டது. இது ஆந்திரப்பிரதேசத்தை ஒட்டிய ஒடிசாவின் கோபால்புர் அருகே இன்று அதிகாலை கரையைக் கடந்தது.

கரையைக் கடந்த தயே புயல் தொடர்ந்து மேற்கு வடமேற்காக நகர்ந்து மெல்ல பலவீனமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சின்னம் காரணமாக ஒடிசாவின் பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. 

மேலும் புயலின் தாக்கம் காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை வரை கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வங்கக் கடலின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் கடல் பகுதி மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. 

Story image

மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதன்கிழமை மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்தது. இது மேலும் வலுவடைந்து வியாழக்கிழமை தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மத்திய மேற்கு வங்கக்கடலில், ஆந்திரப் பிரதேசம், கலிங்கப்பட்டின கடலோரத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்து புயலாக மாறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.