கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் அனைவரும் விடுதலை: கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம் தீர்ப்பு
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்படுவதாக கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.










