தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்ல என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2018, 1:28 am IST

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்ல என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தரமான சேவை வேண்டுமென்றால் அதற்கான பணத்தை மக்கள் செலுத்தியாக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் கட்கரி இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
சுங்கச் சாவடி கட்டணம் என்பது உலகின் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. தரமான சாலைகள் அமைப்பதற்காகவும், அவற்றைப் பராமரிக்கவும் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
சாலைகள் சிறப்பாக இருப்பதன் மூலம் எரிபொருள் சிக்கனம், குறைவான பயண நேரம், வாகனங்களின் பராமரிப்பு செலவு குறைவு உள்ளிட்ட நன்மைகள் உள்ளன. தரமான சேவை வேண்டுமென்றால் அதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டியது அவசியம்.
சுங்கச் சாவடி கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்று ஒரு கருத்து உள்ளது உண்மைதான். எனினும், இப்போதைய சூழ்நிலையில் இக்கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை. எனவே, இது தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்க முடியாது.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி செலவில், 83,677 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன என்றார்.
தொடர்ந்து வாரிசு அரசியல் தொடர்பாகப் பேசிய கட்கரி, 'நான் எனது கொள்கைகளின்படி செயல்படுகிறேன். எனது குடும்பத்தில் இருந்து யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவும் இல்லை; வாய்ப்பு கேட்கவும் இல்லை. இதுவரை என்னைத் தவிர எனது குடும்பத்தில் யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.