அம்பேத்கரை வீழ்த்த பல்வேறு திட்டங்களை தீட்டிய காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு 

அம்பேத்கரை வீழ்த்த பல்வேறு சதித்திட்டங்களை காங்கிரஸ் கட்சி தீட்டியது என்று தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அம்பேத்கரை வீழ்த்த பல்வேறு திட்டங்களை தீட்டிய காங்கிரஸ்: மோடி குற்றச்சாட்டு 

பாட்னா: அம்பேத்கரை வீழ்த்த பல்வேறு சதித்திட்டங்களை காங்கிரஸ் கட்சி தீட்டியது என்று தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பிகார் மாநிலம் ஜமுய் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கருப்புப் பண நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதன் காரணமாக பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தது.

அத்துடன் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நாடெங்கும் அதிகரித்து காணப்பட்டன. ஆனால் தற்போது புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா உடனடியாக பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.

ஆனால், இங்குள்ள எதிர்க்கட்சிகள் நமது வீரர்களை சந்தேகித்து பாகிஸ்தான் நாட்டின் செய்தித் தொடர்பாளர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்

நாட்டின் முக்கிய தலைவரான டாக்டர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்த விதத்தை இன்றைய இளைய தலைமுறையினர் கண்டிபாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அம்பேத்கரை வீழ்த்த பல்வேறு சதித்திட்டங்களை தீட்டினர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com