2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு தொகுதியை விற்பவர்தான் மாயாவதி: மேனகா காந்தி பகீர் புகார்

உத்தரப்பிரதேசம் சுல்தான்புர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2019, 9:23 am

PTI


சுல்தான்புர்: உத்தரப்பிரதேசம் சுல்தான்புர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.

சுல்தான்புரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேனகா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்களிடம் ரூ.15 முதல் 20 கோடி பணம் வாங்கிக் கொண்டுதான் மாயாவதி அவர்களுக்கு தொகுதியே ஒதுக்குவார்  என்று தெரிவித்துள்ளார்.

தொகுதிகளை பணத்துக்கு மாயாவதி விற்பதை அனைவரும் அறிவர். அவ்வளவு ஏன், இதனை அக்கட்சியினரே பெருமையோடு கூறவும் செய்வார்கள். 

ஒரு தொகுதிக்காக ரூ.15 - 20 லட்சம் வரை வேட்பாளர்கள் வழங்க வேண்டும் என்றால், அந்த பணத்தை அவர்கள் மக்களிடம் இருந்துதான் பிடுங்குவார்கள் என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.