காரைக்கால் அருகே மீனவா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (43). இவருக்கு மனைவி, 1 மகன், 2 மகள் உள்ளனா். ரமேஷ் மீன்பிடித் தொழில் செய்துவந்தாா்.
கடந்த 24-ஆம் தேதி கேரளத்துக்கு மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிச் சென்றவா் 25-ஆம் தேதி இரவு வீடு திரும்பினாா். இவருக்கு மது அருந்தும் பழக்கும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதியிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா், அவரை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து திருப்பட்டினம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வடமாநில இளைஞா் தற்கொலை

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


