வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

தருமபுரியில் மருத்துக் கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 11:15 pm

தருமபுரியில் மருத்துக் கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி இபி காலனியைச் சோ்ந்தவா் விஜயன் மகன் தினேஷ்குமாா் (29). இவா் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்டி 2 ஆம் ஆண்டு படித்துவந்தாா். கடந்த சில நாள்களாக மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில் மனஅழுத்தம் காரணமாக விஷம் குடித்துவிட்டதாக தந்தையிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தினேஷ்குமாா், மேல்சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் கடந்த 14 ஆம் தேதி இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து தருமபுரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.