ஹைதராபாத்தில் சொகுசு காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.8 கோடி பறிமுதல்: 7 பேர் கைது

ஹைதராபாத்தில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸாரும் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 8 கோடியை பறிமுதல் செய்தனர்.
ஹைதராபாத்தில் சொகுசு காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.8 கோடி பறிமுதல்: 7 பேர் கைது
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸாரும் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 8 கோடியை பறிமுதல் செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரின் முக்கிய சாலைகளில் தேர்தல் பறக்கும் படையினரும், போலீஸார் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த 2 சொகுசு கார்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டர். 

அதில் ஒரு காரில் உரிய ஆவணங்களின்றி இருந்த கட்டுக்கட்டான ரூ. 2 கோடி ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்ய பின்னர் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், வங்கிக்கு அருகில் நின்றுகொண்டிருந்த 5 பேரிடம் இருந்த ரூ. 6 கோடியையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், சொகுசு கார்கள் மற்றும் காரில் வந்த 7 பேரையும் கைது செய்து இவ்வளவு பெரிய ரொக்கப்பணம் எங்கிருந்து, எங்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பணத்துக்கு உரியவர்கள் யார்?, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவதற்காக கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணங்களில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com