மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பாஜக தேர்தல் அறிக்கை திமிர் கொண்ட, குறுகிய பார்வை: ராகுல் ட்விட்டரில் தாக்கு

பாஜக-வின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். 

News image
Updated On :9 ஏப்ரல் 2019, 12:59 pm IST

பாஜக-வின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மிகத்தீவிர கலந்தாய்வுகளுக்குப் பிறகு தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 100 மில்லியன் மக்களின் குரலாக ஒலிக்கிறது. அதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகவும் சக்திவாய்ந்ததாக அமைந்துள்ளது. 

ஆனால், பாஜக தேர்தல் அறிக்கை வெறும் 4 சுவர்களுக்குள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தனிமைப்படுத்தப்பட்டவரின் குரலாக உள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை மிகவும் குறுகிய பார்வையுடனும், திமிராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தபோது பொருளாதாரத்தில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

எனவே, ஏசி அறையில் உள்ளவர்களால் வறுமையை ஒழிக்க முடியாது. 6 கோடி மக்களிடம் ஆலோசிக்கப்பட்ட பிறகு தான் சங்கல்ப பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பாஜக தேர்தல் வாக்குறுதி வெளியீட்டின் போது பிரதமர் மோடி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.