ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் ராகுல்

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடன் இருந்தனர்.

News image
Updated On :10 ஏப்ரல் 2019, 7:45 am

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் சோனியா, பிரியங்கா, ராபர்ட் வதேரா ஆகியோர் உடன் இருந்தனர்.

அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று காலை குடும்பத்தினருடன் வந்தார் ராகுல் காந்தி. பிறகு காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த ராகுல், மதியம் 1 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

17-ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த பிறகு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.

ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை தோற்கடித்து வெற்றி பெற்றார். 

இந்த முறையும் அமேதி தொகுதியில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்கிறார் என்று தெரிகிறது. 

அமேதியில் ஆறாவது கட்டமாக மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.