கோர்பா (சட்டீஸ்கர்): எல்லா மோடிகளும் திருடர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திங்கள் அன்று தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'ஏன் மோடி என்று பெயர் கொண்டவர்கள் உள்ளவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள்?' என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் எல்லா மோடிகளும் திருடர்கள் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் செவ்வாயன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:
பரம்பரையாக ஆட்சி செய்து வருபவர்கள் இத்தகைய தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துவது என்பது ஒரு நாகரீகமாகி விட்டது. இப்படித்தான் பேசுவதா? இத்தகைய நபர்களை நாம் விலக்கி வைக்க வேண்டும். மோசமான பேச்சு என்பது அவர்களின் இயல்பாகவே ஆகிவிட்டது.
இந்தப் பகுதியில் உள்ள சஹு இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் குஜராத்தில் மோடி என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எல்லாரும் திருடர்களா என்ன?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


