நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

20 ஆண்டுகள் ஆனாலும் ராகுலால் பிரதமர் ஆக முடியாது: சாபம் விடும் சகோதரர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எந்த வகையிலும் ஈடாக மாட்டார் என்று பாஜக வேட்பாளர் வருண் காந்தி கூறியுள்ளார்.

News image
Updated On :19 ஏப்ரல் 2019, 7:18 am

DIN


பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எந்த வகையிலும் ஈடாக மாட்டார் என்று பாஜக வேட்பாளர் வருண் காந்தி கூறியுள்ளார்.

39 வயதாகும் பாஜக வேட்பாளரான வருண் காந்தி பொதுவாகவே எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனது சகோதர சகோதரியான ராகுலையும், பிரியங்காவையும் விமரிசிப்பதை தவிர்த்தே வருவார்.

ஆனால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வருண் காந்தி, பிரதமர் மோடிக்கு ராகுல் எந்த வகையிலும் ஈடாக மாட்டார். இப்போது மட்டும் அல்ல இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் கூட ராகுல் காந்தியால் பிரதமர் ஆக முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ஒருவேளை வரும் தேர்தலில் ராகுல் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டால் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஒன்றும் ஜோதிடன் கிடையாது. ஆனால் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளுக்கு அவர் பிரதமராக முடியாது என்று பதிலளித்தார்.

இந்த நாட்டு மக்கள் மோடிக்காக வெறும் வாக்கினை மட்டுமல்ல, தங்களது ரத்தத்தைக் கூட தியாகம் செய் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.