ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு ஆறுதல்: இதனிடையே, நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயலுக்கு விஜய் மல்லையா ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துடன் போட்டியுடன் செயல்பட்ட நிறுவனம். எனினும், அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலையை நினைத்தால் எனக்கு வருத்தமாக உள்ளது. பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நிதிநெருக்கடியில் இருந்தபோது மக்களின் வரிப் பணத்தில் ரூ. 35,000 கோடியை அந்த நிறுவனத்துக்கு அரசு அளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு பிரச்னை என்றால் அரசு கண்டுகொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.