சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ராகுல் இங்குதான் பிறந்தார், வளர்ந்தார்: பிரியங்கா வதேரா

காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் தான் பிறந்து வளர்ந்ததாக அவரது சகோதரி பிரியங்கா வதேரா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2019, 10:46 am

காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் தான் பிறந்து வளர்ந்ததாக அவரது சகோதரி பிரியங்கா வதேரா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் அவரது சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா வதேரா கூறியதாவது:

ராகுல் மீதான குடியுரிமை சர்ச்சை மிகவும் தவறானது. ராகுல் இந்தியாவில் தான் பிறந்தார், வளர்ந்தார். எனவே அவர் இந்தியர் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெரியும். ராகுல் மீதான இந்த தேவையற்ற சர்ச்சை வெறும் நாடகம்.

எனவே அவர் குடியுரிமை மீதான சர்ச்சை தேவையற்றது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.