தீர்ப்பைப் படிக்கவில்லை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீற வேண்டும் என்றோ, நீதித்துறையை எதிர்க்க வேண்டும் என்றோ, நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்றோ, நீதிமன்றத்தின் மீது பழிசுமத்தும் நோக்கிலோ நான் அவ்வாறான கருத்தைத் தெரிவிக்கவில்லை. நான் அக்கருத்தைக் கூறியபோது, தீர்ப்பின் முழு விவரம் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அதனால், நான் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தீர்ப்பைப் படிக்காமலேயே நான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் மனுதாக்கல் செய்துள்ளவர் (மீனாட்சி லேகி) தனது சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவுமே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இது நீதிமன்ற நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வதுபோல் உள்ளது. எனவே, இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரமாணப் பத்திரத்தில் ராகுல் கூறியிருந்தார்.