காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தண்ணீர்: ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முடிவு
காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


புது தில்லி: காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் கர்நாடாகா திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனையின் முடிவில் காவிரியில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆக. 8 - ல் தில்லியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...