கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறப்பு 

வியாழன் மாலை நிலவரப்படி கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறப்பு 
Published on
Updated on
1 min read

மைசூரு: வியாழன் மாலை நிலவரப்படி கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் வடக்கு பகுதியில் பெலகாவி, பாகல்கோட்டை மற்றும் யாத்கிரி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அருகில் உள்ள  கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மகாராஷ்டிராவின் தென் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் கோதாவரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அளவை மீறி  ஓடுகிறது. இந்த தண்ணீரும் கர்நாடகாவுக்கு வருவதால் கர்நாடகாவில் உள்ள ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

வியாழன் மாலை நிலவரப்பபடி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 90 ஆயிரம் கன அடி நீரும், கபினி அணைக்கு அருகே உள்ள தாரகா அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கிருஷ்ணா ராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 421 கன அடி நீர் திறக்கபப்டுகிறது. 

எனவே மொத்தமாக கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு 1,02,421 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com