மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பள்ளிக் குழந்தைகள் காயம்

மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். 
மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பள்ளிக் குழந்தைகள் காயம்

மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலம், பல்ஹார் மாவட்டத்தில் 49 பள்ளிக் குழந்தைகளுடன் வடா சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் குறுக்கே வரவே அவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியிருக்கிறார். 

இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 14 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com