புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாஜகவில் இணைந்தார் ஆம் ஆத்மி மகளிரணித் தலைவர்

ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணித் தலைவர் ரிச்சா பாண்டே மிஸ்ரா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ-வுடன் பாஜகவில் இணைந்தார்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2019, 1:51 pm

DIN


ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணித் தலைவர் ரிச்சா பாண்டே மிஸ்ரா, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ-வுடன் பாஜகவில் இணைந்தார். 

ஏற்கெனவே, பல்வேறு கட்சியில் இருந்து தலைவர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது மகளிரணித் தலைவர் ரிச்சா பாண்டே பாஜகவில் இணைந்திருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.  

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "2011-இல் அண்ணா ஹசாரே இயக்கத்துக்குப் பிறகு மாற்று அரசியலுக்காக ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தேன். தற்போது பாஜக மாற்று அரசியலை செய்கிறது. எங்குபோய் பார்த்தாலும், பாஜக தொடங்கி வைத்த திட்டத்தின் மூலமே மக்கள் பயனடைகின்றனர்" என்றார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ கபில் மிஸ்ரா இதுகுறித்து பேசுகையில், "தில்லிக்கு தற்போது மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அரசு தேவைப்படுகிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் செயல்படும் அரசுதான் தலைநகருக்குத் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.