தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற அமர்வில் உடனடியாக விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தங்களது கருத்தைக் கேட்காமல், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரித்து முன் ஜாமீன் வழங்குவதோ, வேறு எந்த உத்தரவையும் பிறப்பிப்பதோக் கூடாது என்று கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வைக்கும் வாதங்கள் முக்கியத்துவம் பெறலாம் என்றும், இது சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக மாற்ற அவலம்!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


