உ.பியில் கொடூரம்! தாயின் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி

உ.பியில் கொடூரம்! தாயின் முன்னே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி
Updated on
1 min read

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத தாயின் முன்னாலே, சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

வீட்டில் இருந்த பதின் வயது சிறுமியை ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தந்தை வேலைக்காக வெளியே சென்று விட, காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமியின் தாயார் மொட்டை மாடியில் இருந்துள்ளார். இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த சர்வேஷ் ராவத் என்பவர், வீட்டிற்குள் புகுந்து சிறுமியை அடித்து துன்புறுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதற்கிடையே, சிறுமியின் தாய் இதைப்பார்த்து மகளை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால், ராவத் அவரையும் அடித்து தள்ளிவிட்டுள்ளார். அவர், மகளைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை. 

இதன்பின்னர் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், சர்வேஷ் மீது காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வேஷ் ராவத்(32). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி விஷம் அருந்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். தொடர்ந்து அவர் தற்போது, கிங் ஜார்ஜ் மருத்துவப்  பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com