ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர்: டி.கே.சிவகுமார்

குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்று கர்நாடக இடைத்தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 டிசம்பர் 2019, 7:17 am

DIN

குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்று கர்நாடக இடைத்தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிச.5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 67.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில், பாஜக 10 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதையடுத்து பாஜக ஆட்சியையும், முதல்வர் பதவியையும் எடியூரப்பா தக்கவைத்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவு தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

15 தொகுதிகளின் வாக்காளர்களின் முடிவுக்கு நாங்கள் உடன்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்றுக்கொள்கிறது. குறைபாடுள்ளவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டதால், இந்த தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி சோர்வடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.