விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

செல்ஃபோனை பயன்படுத்த வேண்டாம்: மக்களை எச்சரிக்கும் மாவோயிஸ்டு

செல்ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்திருப்பதால் ஒடிஸாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஸ்வபிமான் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2019, 10:22 am

IANS


புவனேஸ்வர்: செல்ஃபோனை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை மாவோயிஸ்டுகள் எச்சரித்திருப்பதால் ஒடிஸாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஸ்வபிமான் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தரப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமத்தினர் செல்ஃபோனைப் பயன்படுத்த வேண்டாம் என்று மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.

சாலையோரம் இருக்கும் அறிவிப்புப் பலகையில் மாவோயிஸ்டுகள் இந்த எச்சரிக்கையை தெரிவித்துள்ளனர்.

அந்த எச்சரிக்கையில், கிராம மக்கள் யாரும் செல்ஃபோனை பயன்படுத்தவே கூடாது, அப்படியே யாருக்கேனும் செல்போனில் அழைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றால் கூட எங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.