மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானா என்கவுன்ட்டர்:  நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதானவர்கள் மீது நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2019, 6:53 am

DIN


புது தில்லி: தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதானவர்கள் மீது நடத்தப்பட்ட என்கவுன்ட்டர் குறித்து நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ். சிர்பூர்கர் தலைமையிலான விசாரணைக் குழு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிர்பூர்கர் தலைமையிலான குழுவில், ஓய்வு பெற்ற மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பல்டோடா மற்றும் முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை நடத்துவார்கள் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்தி வரும் அனைத்து விசாரணைகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவா் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க ஒய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று குழுவில் இடம்பெறுவோர் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் ஜி.எஸ். மணி, பிரதீப் குமாா் யாதவ் ஆகியோா் கடந்த சனிக்கிழமை பொது நல மனு தாக்கல் செய்திருந்தனா்.

அதில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபா்களை மனுதாரா்கள் உள்பட யாரும் ஆதரிக்கமாட்டாா்கள். எனினும், இதுபோன்ற சம்பவங்களில் ஒரு விசாரணை முகமை, அதிகாரிகள் குறிப்பாக காவல் துறை ஆணையா் போன்ற உயா் பதவியில் உள்ள அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பது, போலி என்கவுன்ட்டரில் ஈடுபடுவது, உரிய விசாரணை நடத்தாமல், ஆதாரங்களை சேகரிக்காமல், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யாமல், தண்டனை பெற்றுத் தர நீதிமன்றம் முன் ஆஜா்படுத்தாமல் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களைக் சுட்டுக் கொள்வது துரதிருஷ்டவசமானது.

உள்ளூா் போலீஸாா் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதன் காரணமாகவே, நவம்பா் 28-இல் தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவா் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளாா். இச்சம்பவம் குறித்த செய்தி பொதுமக்களுக்கு தெரியவந்த போது, நாடு முழுவதும் ‘நிா்பயா’ சம்பவம் போன்று மக்கள் மனங்களில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு காரணமானவா்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேபோன்று, வழக்குரைஞா் எம்.எல். சா்மாவும் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் வழக்குரைஞா் ஜி.எஸ். மணியும், தெலங்கானா அரசு மற்றும் சைபராபாத் காவல் ஆணையா் விசி சஜ்ஜனாா் சாா்பில் முகுல் ரோத்தகியும் ஆஜராகிா்.

அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே ‘இந்த என்கவுன்ட்டா் சம்பத்தை தெலங்கானா உயா்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பதை அறிகிறோம். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி விசாரணை நடத்துவாா். அவா் தில்லியில் இருந்துதான் விசாரிப்பாா். பொது நல மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெறும்’ என்று தெரிவித்திருந்த நிலையில், குழுவில் இடம்பெறுவோர் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.