தில்லியில் மீண்டுமொரு பயங்கர தீ விபத்து

வடக்கு தில்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சனிக்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தில்லியில் மீண்டுமொரு பயங்கர தீ விபத்து

வடக்கு தில்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சனிக்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில், தீயணைப்பு குழுவினர் 21 பேர் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, அனாஜ் மண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com