வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தில்லி ஜாமியா பல்கலையில் இருந்து தேர்வு மையத்தை மாற்றுகிறது இக்னோ

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) அதன் தேர்வு மையத்தை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2019, 10:51 am

PTI

புது தில்லி: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) அதன் தேர்வு மையத்தை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள தேர்வு மையம் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று இக்னோ தெரிவித்துள்ளது. தேர்வு மையம் மாற்றப்பட்டிருப்பது குறித்து மாணவர்கள் இக்னோ பல்கலையின் வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், ”என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தியபோது அவா்களை போலீஸாா் தடியடி நடத்தி விரட்டி அடித்தனா்.

இதை கண்டித்து அலிகா் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது, போலீஸாருக்கும், மாணவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போலீஸாா் காயமடைந்தனா். கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி போலீஸாா் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். 

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, இக்னோ தனது தேர்வு மையத்தை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.