புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாதுகாப்புத் தீவிரம்: தில்லியில் நிலைமை சீரடைந்து வருகிறது

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், தில்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வருகிறது.

News image
Updated On :21 டிசம்பர் 2019, 9:15 am

DIN


புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், தில்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை பழைய தில்லியின் தர்யாகஞ்ச் மற்றும் சீமாபூர் பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டன. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் இன்று ஓரளவுக்கு தில்லியில் நிலைமை சீரடைந்துள்ளது.

ஷஹ்தாரா மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த சம்பவங்களுக்கும் இடம் அளிக்காத வகையில், தில்லியின் பல பகுதிகளில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் கொடியணிவகுப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.