கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்லா ஊரிலும் இப்படித்தான் போல: லஞ்சம் வாங்கிய எஸ்ஐ கைது

சொத்துத் தகராறில் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :21 டிசம்பர் 2019, 6:55 am


புவனேஸ்வர்: சொத்துத் தகராறில் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

கட்டாக் வாகனப் போக்குவரத்து காவல்துறையில் ரூ.94.67 லட்சம் மதிப்பிலான சொத்து தொடர்பான வழக்கில், ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் வாங்கிய காவல்துறை துணை ஆய்வாளர் ஜன்மஜெய் மாலிக்கை லஞ்சம் ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதே சமயம், கட்டக்கில் உள்ள அவரது அரசு குடியிருப்பிலும், பிடானாசி பகுதியில் உள்ள மூன்று மாடி குடியிருப்பிலும், கேந்த்ராபாரா மாவட்டத்தின் அந்தாரா கிராமத்தில் உள்ள வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் டிசம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அவர் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரை 2020ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.