ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, போலீஸாரால் சுடப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்களை தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்கிறார்கள்.
இதற்காக, ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் தனியாக ஒரு அறை உருவாக்கப்பட்டு, அதில், சுடப்பட்டு உயிரிழந்த 4 பேரின் உடல்களை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்கிறார்கள். இந்த நிகழ்வு முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்படுகிறது.